×

மண்டபம் அருகே நாச்சியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

மண்டபம்,மே 1: மண்டபம் அருகே தில்லை நாச்சியம்மன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தில்லை நாச்சியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சி பகுதியில் தில்லைநாச்சியம்மன் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள தில்லை நாச்சியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருவிழாவை யொட்டி அதிகாலையில் திருக்கோவில் சன்னதியில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் தில்லை நாச்சியம்மன் குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் இருந்து பால்குடம் எடுத்து மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து தில்லை நாச்சியம்மன் சன்னதியில் கருவறையில் அமைந்துள்ள அம்மன் சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தில்லை நாச்சியம்மன் குடியிருப்பு கிராம நுழைவு பகுதியில் இருந்து பக்தர்கள் பூந்தட்டு எடுத்துக் கொண்டு மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து தில்லை நாச்சியம்மன் சன்னதியில் அமைந்துள்ள அம்மன் சிலைக்கு பூக்களை சாத்தி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். அதன் பின்னர் சன்னதியில் சிறப்பு பூஜைகள், தீபாராதணை வழிபாடுகளுடன் பூச்சொரிதல் விழா நிறைவு பெற்றது. வழிபாடுகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

The post மண்டபம் அருகே நாச்சியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா appeared first on Dinakaran.

Tags : Nachyamman Temple ,Mandapam ,Thillai Nachiamman temple ,Thillai Nachiamman ,Thillainachyamman village ,Mandapam Union Chattakon Valasai Panchayat ,Thillai Nachiyamman temple ,Flower sprinkling ,Nachiyamman temple ,
× RELATED சென்னை கிண்டியில் அமைந்துள்ள...